உள்ளூர் செய்திகள்

புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

Published On 2023-05-01 08:07 GMT   |   Update On 2023-05-01 08:07 GMT
  • ரிஷிவந்தியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரிஷிவந்தியம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News