உள்ளூர் செய்திகள்

ஆரணியில் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு

Published On 2023-03-27 09:32 GMT   |   Update On 2023-03-27 09:32 GMT
  • கிணற்றில் குளிக்கும்போது விபரீதம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி களம்பூர் பகுதியில் மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே செல்வம் என்பவருடைய நிலத்தில் உள்ள தரை கிணற்றில் கிருஷ்ணமூர்த்தி குளிக்க சென்றார். மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணெதிரே குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

நீண்ட நேரம் அவர் வராததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து வள்ளியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Tags:    

Similar News