உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

ஆரணியில் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்

Published On 2022-06-17 09:20 GMT   |   Update On 2022-06-17 09:20 GMT
  • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

ஆரணி:

ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜ கோபுரத்துடன் புதியதாக ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் விழா புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் இன்று நடந்தது. ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீ பெரிய ஜீயர் சின்ன ஜீயர் சுவாமிகள் ஸ்ரீபெரும்புத்துர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ அப்பர் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமி முன்னிலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை செய்து கங்கை, யமுனா, கோதாவரி, காவிரி, கமண்டலநாகநதி உள்ளிட்ட புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு வெங்கடாஜலபதி கோவில் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அ.தி.மு.க. இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தா.ம.க.தலைவர் ஜி.கே.வாசன், இந்துமக்கள் கட்சி தலைவர் சம்பத், ரத்னகிரி பாலமுருகனடிமை சாமிகள் கலவை சச்சிதானந்தா சாமிகள் கலந்து கொகொண்டனர்.

இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு வந்த அனைவரையும் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் லலிதா சண்முகம் அருண்குமார் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும நிர்வாகிகள் வரவேற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Tags:    

Similar News