உள்ளூர் செய்திகள்

குடிநீர் தொட்டியில் விழுந்த முதியவர் சாவு

Published On 2023-01-29 15:01 IST   |   Update On 2023-01-29 15:01:00 IST
  • மதுபோதையில் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் ராமகிருஷ்ண உடையார் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது70). இவர் கடந்த 27-ந்தேதி இரவு மதுபோதையில் தனது வீட்டருகே தரைமட்டமாக உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இரவு நேரத்தில் யாரும் பார்க்காததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

நேற்று முருகேசனின் சகோதரர் விஸ்வநாதன், தண்ணீர் தொட்டியில் முருகேசன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் முருகேசன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார்இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News