செய்யாறில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
- 1000 பேருக்கு அன்னதானம்
- பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்
செய்யாறு:
செய்யாறு நகர அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா நேற்று ஆரணி கூட்ரோடு, கொடநகர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன், மெய்யப்பன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ் நகர நிர்வாகிகள் தணிகாசலம், இளையராஜா, சுரேஷ், எழில், பிரகாஷ், வெங்கடேசன், கோபி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று செய்யாறு ஒன்றிய அண்ணா திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கி எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலை பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.