உள்ளூர் செய்திகள்

குளியலறையில் இறந்து கிடந்த லாரி டிரைவர்

Published On 2023-05-27 14:58 IST   |   Update On 2023-05-27 14:58:00 IST
  • குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

வந்தவாசி அருகே உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50), லாரி டிரைவர்.

இவர், நாக்பூரில் இருந்து லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஆலைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அவர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அங்கு சென்று காவலாளி பார்த்த போது லோகநாதன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த லோகநாதனின் உடலில் எந்தவித காயமும் இல்லை என்றும் அவர் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொ டர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News