உள்ளூர் செய்திகள்
திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் தரிசனம்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் மேற்கு குளக்கரையில் 500 ஆண்டு கால திரவுபதியம்மன் கோயில் அவ்வூரில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர் சார்பில் சீரமைத்து கட்டி உள்ளனர். இக்கோயிலின் மகாகும்பாபிசேக விழா கடந்த 10-ந்தேதி காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீர்த்தப்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையும் யாகபூஜைகளையும் போளூர் கைலாசநாதர் கோயில் கிருத்திகானந்த சிவாச்சாரியார், சென்னை சந்திரசேகர சிவாச்சாரியார், கைலாஷ், மணிகண்ட சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.