உள்ளூர் செய்திகள்
- உயர்நீதிமன்ற நீதிபதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தில் திருவள்ளுவர் உருவசிலை திறப்பு விழா அமைப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஏகாச்சாரம் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் டி.கே.மூர்த்தி, சாம்பசிவன், அருனகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர். முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.