உள்ளூர் செய்திகள்
- 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது
- அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தது
போளூர்:
போளூர் பகுதியில் கடந்த வாரம் திடீரென்று தொடர்ந்து 5 நாட்கள் கோடை மழை பெய்தது.
இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. ஒரு சில பகுதியில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தது.
இந்த நிலையில் 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இன்று காலை ஒரே பனிமூட்டமாகவும் இருந்தது இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.