உள்ளூர் செய்திகள்

வேலூர் - திருவண்ணாமலை பிரதான சாலையில் ஓடிய காளைகள்

Published On 2023-01-27 15:21 IST   |   Update On 2023-01-27 15:21:00 IST
  • வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
  • கீழ்வல்லத்தில் மாடு விடும் விழா நடந்தது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்வல்லம் கிராமத்தில் நேற்று 26ம்தேதி குடியரசு தின விழா முன்னிட்டு, 51-ம் ஆண்டாக காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் நுழைவுக்கட்டணம் ரூ.1500 செலுத்தி கலந்து கொண்டு வீதியில் வேகமாக ஓடியது.

இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற இரும்பிலி ஐஸ்வர்யா என்பவர் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ55001/-ம், இரண்டாமிடம் பெற்ற சுனிதா எக்ஸ்பிரஸ் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ50001-ம், மூன்றாமிடம் பெற்ற வீரதமிழச்சி காளைக்கு ரூ45001-ம் உள்பட 45 காளைகளுக்கு பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

காளைவிடும் திருவிழாவை வேலூர் உதவி கலெக்டர் ராமலிங்கம் வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா ஆய்வாளர் பார்த்தசாரதி, மகளிர் காவல் ஆய்வாளர் ஜாகிதா உள்பட 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.காளைவிடும் வேடிக்கை பார்க்க வந்த 7 பேரை மாடுகள் முட்டியதில், லேசாக காயமடைந்த சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

காளைவிடும் திருவிழா நடந்த தெருவுக்கு அருகே, வேலூர் - திருவண்ணா மலை மெயின்ரோடு உள்ளதால் சில காளைகள் மெயின்ரோடு வழியாக கண்ண மங்கலம் புதிய சாலை பகுதியில் ஓடியது.

இதனால் அவ்வழியே நடந்து சென்றவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கண்ணமங்கலம் நாகநதி மேம்பாலம் அருகே சில காளைகள் நின்று கொண்டு போக்கு வரத்துக்கு இடைஞ்சல் செய்த போது காளைகளின் உரிமையாளர்கள் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News