உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி வங்கி அதிகாரி சாவு

Published On 2023-01-23 09:39 GMT   |   Update On 2023-01-23 09:39 GMT
  • பால் வாங்க சென்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு டவுன், நரசிம்ம நகரில் வசித்து வருபவர் ஐயப்பன் வயது 55, இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் பால் பாக்கெட் வாங்க ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது செய்யாறு பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஐயப்பன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் பிரேம்குமார் செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News