உள்ளூர் செய்திகள்

ரேணுகாம்பாள் கோவிலில் வருடாபிஷேக பூஜை

Published On 2023-01-28 15:16 IST   |   Update On 2023-01-28 15:16:00 IST
  • யாகபூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்
  • அதிகாலை என்பதால் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகம் ஓராண்டு வருடாபிஷேக யாக பூஜை நேற்று திதி நட்சத்திரம் கணக்கில் அதிகாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதிகாலை என்பதால் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் யாகபூஜையின் நன்கொடையாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

ஹோமம் கலசபூஜை முடிந்த பின்னர், புனித நீர் அம்மனுக்கும், சோமநாதீஸ்வரருக்கும் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

யாகபூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News