உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்

Published On 2023-04-28 07:42 GMT   |   Update On 2023-04-28 07:46 GMT
  • செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
  • வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

செய்யாறு:

வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே பகுதியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். தென்கழனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து மாணவியரின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News