உள்ளூர் செய்திகள்

ஜவுளி வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2022-11-28 15:02 IST   |   Update On 2022-11-28 15:02:00 IST
  • ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது மர்ம கும்பல் கைவரிசை
  • போலீசார் விசாரணை

ஆரணி:

ஆரணி அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகர் ராஜீவ் காந்தி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் பட்டு சேலை உற்பத்தி செய்து வருகிறார்.

இவரது மனைவி வசந்தி. இவர்கள் குடும்பத்துடன் நேற்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலா முடிந்து மாலை மனோகரன் தனது குடும்பத்துடன் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

பின்னர் பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மனோகரன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் திருவண்ணாமலை கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலை உற்பத்தியாளர் வீட்டில் பட்ட பகலில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News