உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.வெங்கடேஸ்வரன்.

வெள்ளகோவில் நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

Published On 2023-07-28 10:21 GMT   |   Update On 2023-07-28 10:21 GMT
  • காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் பணியாற்றி வந்துள்ளார்.
  • எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வெள்ளகோவில்.

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த ஆர்.மோகன் குமார் ஈரோடு மாவட்டம், பவானிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். அந்த பதவிக்கு காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்திற்கு இடம் மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வெள்ளகோவில் புதிய ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News