உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பல்லடம் அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மோதல் ஒருவர் கைது

Published On 2023-08-03 07:30 GMT   |   Update On 2023-08-03 07:30 GMT
  • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
  • பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

பல்லடம்:

திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண்ணை வீட்டில் இருந்து திடீரென காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இளம்பெண் வசிக்கும் பகுதி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Tags:    

Similar News