உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் பாலம் கட்டுமானப்பணி மீண்டும் தொடக்கம்

Published On 2023-11-22 06:34 GMT   |   Update On 2023-11-22 06:34 GMT
  • நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.
  • இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது

திருப்பூர் : 

திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.யூனியன் மில் ரோட்டையும், ஈஸ்வரன் கோவில் ரோட்டையும் இணைக்கும் வகையில் இந்த புதிய பாலம் திட்டமிடப்பட்டு, இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது.நொய்யல் ஆற்றினுள் தூண்கள் அமைக்க வேண்டிய நிலையில் இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை பணி நடக்கும் இடத்தில் தடை செய்து திருப்பி விடப்பட்டது. அதன் பின் பண்டிங் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் கோவை, திருப்பூர் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.இதனால் நொய்யல் ஆற்றில் மழை நீர் பெருமளவு பெருக்கெடுத்ததில் பாலம் கட்டுமான பணியை மேற்கொள்ள முடியவில்லை.தற்காலிகமாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளதால் கட்டுமானப்பணி முழு வீச்சில் துவங்கி உள்ளது.

Tags:    

Similar News