உள்ளூர் செய்திகள்

ஹவுசிங் யூனிட்டில் மலை போல் குவிந்த குப்பைகளை படத்தில் காணலாம்.

உடுமலை ஹவுசிங் யூனிட் பகுதியில் தூர்வாராத சாக்கடையால் சுகாதார சீர்கேடு

Published On 2022-07-09 10:42 GMT   |   Update On 2022-07-09 10:42 GMT
  • உடுமலை பழனி ரோட்டு ஹவுசிங் யூனிடில் அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர்.
  • இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

உடுமலை :

உடுமலை பழனி ரோட்டில் ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளதால் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் குப்பைகளில் இருந்து விஷஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மிகவும் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரியும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News