உள்ளூர் செய்திகள்

ஆண் குழந்தையை படத்தில் காணலாம்.

திருப்பூரில் அனாதையாக கிடந்த 3 மாத ஆண் குழந்தை மீட்பு

Published On 2023-03-14 08:03 GMT   |   Update On 2023-03-14 08:03 GMT
  • மூன்றுமாத ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது.
  • நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் நல்லுார் காசிபாளையம் ரோட்டில், அணைப்பள்ளி அருகே உள்ள காட்டுப் பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் சென்று பார்த்தபோது அங்கு மூன்றுமாத ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது. குழந்தையை மீண்டும் பொதுமக்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ஆண் குழந்தையை வீசி சென்றது யார் எதற்காக வீசி சென்றார்கள் என நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ர்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக குழந்தைகள் நல அதிகா ரிகள் கூறியிருப்பதாவது:-

குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், 30 நாட்களுக்குள் நேரில் அணுகி பெற்றக்கொ ள்ளலாம்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (0421 2971198), குழந்தைகள் நலக்குழு தலைவர் (0421 2424416), கோவை மாவட்டம் பொள்ளாச்சி சிங்காரம்பா ளையம் பிரிவில் உள்ள சரணாலயம், குழந்தைகள் தத்து மையத்தை, 90039 61966, 73738 48341 என்ற எண்களில் தொடர்புகொ ள்ளலாம்.பொதுமக்கள் யாரும் தொடர்பு கொள்ளாதபட்சத்தில், சட்டப்படி தத்து கொடுக்க ப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News