உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இளநீர் கொள்முதல்

Published On 2022-10-25 09:02 GMT   |   Update On 2022-10-25 09:02 GMT
  • உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
  • இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.

குடிமங்கலம் :

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இதில் தேங்காய் உற்பத்திக்காக மட்டுமல்லாது இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலால் படுமோசமாக பாதிக்கப்பட்டன. மரங்கள் பச்சையம் இழந்து கருப்பாக மாறி இளநீர் காய்கள் உற்பத்தி முற்றிலுமாக பாதித்தது.

பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், இளநீர் உற்பத்திக்காக பராமரித்த தென்னை மரங்களை, வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொடர்ந்துஊரடங்கு காலத்தில், விற்பனை வாய்ப்புகள் குறைந்தது. இவ்வாறுகடந்த இரண்டு ஆண்டுகளாக இளநீருக்கான தென்னை மரங்களை பராமரித்த விவசாயிகள்தொடர் பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

தற்போது வெள்ளை ஈ தாக்குதல் சற்று குறைந்து, இளநீர் காய்கள் பிடிப்பது அதிகரித்துள்ளது. அதே போல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் நிலையாக மாறியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில், நேரடியாக வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர். தரத்தின் அடிப்படையில் இளநீர் 22-24 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஆரஞ்ச் மற்றும் பச்சை என இரு வகை இளநீர் காய்களுக்கும், தேவை அதிகரித்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இளநீர் உற்பத்திக்கான மரங்களை பராமரிப்பது மிக கடினமானதாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, உரம் உட்பட பிற இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நிலையான விலை கிடைத்தால் மட்டுமே, இவ்வகை தென்னை மரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியும்.கட்டுப்படுத்த முடியாத நோய் தாக்குதல் பரவும் போது, வேளாண்துறை வாயிலாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மானியத்தில் மருந்துகள் வாங்க அரசு உதவ வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News