உள்ளூர் செய்திகள்
தேசிய நூலக வார விழா நடைபெற்ற காட்சி. 

உடுமலையில் தேசிய நூலக வார விழா கொண்டாட்டம்

Published On 2022-11-17 07:24 GMT   |   Update On 2022-11-17 07:24 GMT
  • நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர்.
  • துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர்.

உடுமலை:

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் தேசிய நூலக வார விழா 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது .முதல் நாள் நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி மற்றும் புதிய நூல்கள் அறிமுக விழா, உறுப்பினர் சேர்க்கை, நூலக புரவலர்கள் சேர்க்கைகள் நடைபெற்றன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் மாணவிகள் நூலகத்திற்கு சைக்கிளில் களப்பயணம் வந்தனர்.

நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,சுபேதார் நடராஜ் ,பொருளாளர் சிவகுமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர். வரும் 20ந் தேதி வரை நடக்கும் நூலக வார விழாவில் பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. முன்னால் ராணுவ வீரர் நலச் சங்கம் மற்றும் ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் புரவலர்களாக சேர்ந்தனர்.

Tags:    

Similar News