உள்ளூர் செய்திகள்
மொரட்டுபாளையம் ஊராட்சியில் சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை
- மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
- கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டு பாளையம் ஊராட்சி புதிய ஆதிதிராவிடர் காலனியில் புதிதாக ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கணேஷ் குமார் , வார்டு உறுப்பினர்கள் தவமணி சக்திகதிரவன் , தங்கமணி கோவிந்தசாமி,உமா மகேஸ்வரி சுரேஷ், பாலமுருகன், கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.