உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூா் மாவட்டதில் மருத்துவ பணிகளுக்கு காலியாக உள்ள 61 பணியிடங்களுக்கு 14 ந்தேதி நோ்காணல்

Published On 2022-10-03 13:30 IST   |   Update On 2022-10-03 13:30:00 IST
  • பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.
  • விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

திருப்பூா் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான நோ்காணல் வரும் அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு, அறை எண்-240, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.இதுதொடா்பான விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News