உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தொடா் மழையால் தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிப்பு

Published On 2022-11-06 03:47 GMT   |   Update On 2022-11-06 03:47 GMT
  • காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது.
  • ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா்.

காங்கயம்:

காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலா்த்தும் உலா்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்துப் பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெறும்.

இந்நிலையில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது. இதனால், தேங்காய் உடைத்து உலா்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா். இதனால் தேங்காய் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News