உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்

Published On 2022-11-01 07:06 GMT   |   Update On 2022-11-01 07:06 GMT
  • போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.
  • சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: 

கோவையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ெரயில் (05304) இயக்கப்படுகிறது.திங்கட்கிழமை காலை 4:40மணிக்கு கோவையில் புறப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா வழியாக பயணித்து புதன்கிழமை காலை கோரக்பூர் செல்கிறது. இன்று முதல் இந்த ெரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது.

ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் நவம்பர் 16-ந்தேதி வரை கோவை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது. போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.

தினமும் காலை 6மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) 3-வது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். கோவைக்கு மதியம் 12:20க்கும், திருப்பூருக்கு மதியம் 1:10க்கும் வரும்.

நவம்பர் இரண்டாவது வாரம் வரை போத்தனூர் - கோவை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு மதியம், 12மணிக்கு போத்தனூரில் நிற்கும்.போத்தனூரில் இருந்து இருகூர் வழியாக திருப்பூருக்கு பயணிக்கும். கோவை ெரயில்வே சந்திப்புக்கு வராது.பொறியியல் மேம்பாட்டு பணியால், மதுரை - கோவை, ஷொர்Èர் - கோவை, கோவை - கண்Èர், கோவை - ஷொர்Èர் உள்ளிட்ட ெரயில்களின் இயக்கமும் இன்று முதல் மாற்றப்படுகிறது. சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News