உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பணியிடத்தை நிரப்பவேண்டும்

Published On 2023-05-14 07:24 GMT   |   Update On 2023-05-14 07:24 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது
  • தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்:

தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர்ஈ.பி.அ.சரவ ணன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறு ப்பேற்றுள்ள மு.பெ.சாமிநாத னிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து ள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்மொழி வளர்ச்சி க்காக உருவாக்கப்பட்ட துறையானா 'தமிழ் வளர்ச்சித்துறை பல மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது.

திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளாக துணை இயக்குனர் நியமிக்கப்படவில்லை தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மாதத்துக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே திருப்பூர் வந்து செல்கிறார். எனவே திருப்பூர் மாவ ட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பணியிடத்தை விரைவாக நிரப்ப தீர்வு கண்டு தமிழ் மொழி மென்மேலும் வளர்ந்து சிறக்க தாங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News