உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி.

வெள்ளகோவில் நூல் மில்லில் தீ விபத்து

Published On 2023-08-02 09:50 GMT   |   Update On 2023-08-02 10:21 GMT

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள அனுமந்தபுரத்தில் முருகப்பன் (30) என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. நேற்று மாலை பஞ்சில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மில்லின் மேற்கூறை முற்றிலுமாக எரிந்தது.

மேலும் எந்திரங்கள் மற்றும் பஞ்சு, எரிந்து நாசமாயிற்று. இந்த தீ விபத்து க்கு மின்கசிவு காரணமாக இருக்கலாமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News