உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆய்வு

Published On 2023-06-30 10:23 GMT   |   Update On 2023-06-30 10:23 GMT
  • தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது.
  • சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உடுமலை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருணசாமி உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும் ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்

பின்பு செய்தியாளர்களிடம் கூறும் போது,

தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர் . ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு உள்ளனர் சர்க்கரை அலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News