உள்ளூர் செய்திகள்

கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

திருப்பூா் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-02 06:23 GMT   |   Update On 2023-03-02 06:23 GMT
  • மருத்துவமனையில் 166 மருத்துவா்களும், 225 செவிலியா்களும் பணியில் உள்ளனா்.
  • கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் உள்பட மொத்தம் 6 ஆய்வகங்களும் உள்ளன.

திருப்பூர் :

திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் 166 மருத்துவா்களும், 225 செவிலியா்களும் பணியில் உள்ளனா்.

இந்த மருத்துவமனையில் மொத்தம் 1,170 படுக்கைகளும், வெளி மற்றும் உள்நோயாளிகள் பரிசோதனைக்கூடம், தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம், கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் உள்பட மொத்தம் 6 ஆய்வகங்களும் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 700 முதல் 750 உள்நோயாளிகளுக்கும், 2,000 முதல் 2,500 வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட கலெக்டர் வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சிகிச்சையில் இருக்கும் நபா்களின் உடல் நலம் விசாரித்ததுடன், சிகிச்சை அளிக்கும் முறை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் முருகேசன், கண்காணிப்பாளா் ஜெயசங்கரநாராயணன், மருத்துவா்கள் சஞ்சய், தீபக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News