உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

உடுமலை பள்ளியில் தேசிய கல்வி கொள்கை குறித்து விழிப்புணர்வு

Published On 2023-07-30 04:41 GMT   |   Update On 2023-07-30 04:41 GMT
  • தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
  • ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் வேண்டும்.

உடுமலை:

தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து விளக்கவும் மாவட்டம் தோறும் ஒரு பிரதிநிதியை மத்திய கல்வி அமைச்சர் அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட பிரதிநிதியாக சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மேகநாதன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் உடுமலை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:- தேசிய கல்விக் கொள்கை 21 ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப பரந்த நெகிழ்வான பல்துறை கல்வி வழங்குகிறது.

இதனால் நமது நாட்டை ஒரு துடிப்பான அறிவு சார்ந்த சமூகமாகவும் உலகளாவிய அறிவு வல்லரசாகவும் மாற்ற முடியும். ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேசிய கல்விக்கொள்கையில் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இதனை பின்பற்றி வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News