உள்ளூர் செய்திகள்

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-12-17 05:52 GMT   |   Update On 2022-12-17 05:52 GMT
  • தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
  • தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தாராபுரம் :

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.அதனை தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தொடங்கி வைத்தார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை சென்று திரும்ப தொழில் பயிற்சி நிலையம் வந்தது. முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது போதை மற்றும் புகையிலை பொருட்களை ஒழித்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதை மற்றும் புகையிலை பொருள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதில் அளித்தனர். தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  

Tags:    

Similar News