உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

Published On 2022-12-15 13:17 IST   |   Update On 2022-12-15 13:17:00 IST
  • ஊத்துக்குளி அருகே உள்ள சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்.
  • கதவை உள்புறமாக சாத்திக்கொண்டு வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார்.

ஊத்துக்குளி :

ஊத்துக்குளி அருகே உள்ள சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் தினந்தோறும் குடித்து விட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அவரது தங்கை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட சண்டையில் வீட்டிற்குள் சென்ற ஜீவானந்தம் கதவை உள்புறமாக சாத்திக்கொண்டு வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் இறந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News