உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கொங்கலக்குறிச்சி இணைப்பு சாலையில் பாலம் அமைக்க கோரிக்கை

Published On 2023-01-01 10:01 IST   |   Update On 2023-01-01 10:01:00 IST
இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

உடுமலை:

உடுமலை ஒன்றியம் ஆலம்பாளையம் கிராமத்தில் இருந்து பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சிக்கு 3 கி. மீ., தொலைவுக்கு இணைப்பு ரோடு அமைந்துள்ளது. பல்வேறு விளைபொருட்களை எடுத்துச்செல்ல இந்த ரோட்டை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் பவளபுரம் என்ற குடியிருப்பு அமைந்துள்ளது . இந்த இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்ல முடிவதில்லை. பல கிலோமீட்டர் தூரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் பாலம் கட்ட வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News