உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காப்பர் கம்பிகள் திருடிய 4பேர் கைது

Published On 2022-08-06 04:48 GMT   |   Update On 2022-08-06 04:48 GMT
  • கேத்தனூரில் இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது.
  • 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளது. இங்கு உள்ள இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து காற்றாலையின் மேலாளர்கள் ரமேஷ் கண்ணன், கார்த்திக் பிரபு ஆகியோர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் 4 பேர் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேத்தனூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகன் கவியரசு (வயது 25), தங்கராஜ் மகன் தீபக்( 25), காசிராஜா மகன் தனபால் (25), ராஜாமணி மகன் சதீஷ் (25) என்பதும் காப்பர் கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது.அவர்களிடமிருந்து 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News