உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2023-01-23 09:42 GMT   |   Update On 2023-01-23 09:42 GMT
  • எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தொகுதி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி மந்தைவெளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி தலைமை வகித்தார். அனைவரையும் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.செல்வம் வரவேற்றார், கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ் நகரச் செயலாளர் டி. டி. குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், தொடக்க உரை ஆற்றினார்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி கலந்து கொண்டு பேசிகனார்.

கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் டாக்டர் சுனில் பேராவூரணி திலீபன், உட்பட ஏராளமானோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பிரதி பழனி நன்றி கூறினார்.

Tags:    

Similar News