உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-01-29 09:43 GMT   |   Update On 2023-01-29 09:43 GMT
  • தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி- கேத்தாண்டப் பட்டி ரெயில் நிலையங்களுக்கிடையே கொடையாஞ்சி பகு தியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த வர் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த எட்வின் தாமஸ் (வயது 40) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி பலியானதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News