உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி டீக்கடைக்காரர் பலி

Published On 2022-09-30 10:04 GMT   |   Update On 2022-09-30 10:04 GMT
  • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி அருகே காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் குமார் (வயது 62) இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்

இந்நிலையில் நேற்று விண்ணமங்கலம் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வளையாம்பட்டு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு சம்பவம்

இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவருக்கு அமுதா என்கிற மனைவியும் 2 மகளும் உள்ளனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News