உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- பாலாபிஷேகம் செய்து வழிபாடு
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி,
வாணியம்பாடி தொகுதி புல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மேல்பள்ளத்தூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊர் கவுண்டர் டி.தங்கவேல், தர்மகர்த்தாக்கள் பி.கே. ரவி, மகேந்திரன், ரமேஷ், பூஜாரி பெரிய மாணிக்கம், கோல்கார் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள்நாதன், துணைத் தலைவர் செல்லப்பன், வார்டு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவை நடத்தினர்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.