உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு

Published On 2022-10-26 10:21 GMT   |   Update On 2022-10-26 10:21 GMT
  • வேலூரைச் சேர்ந்தவர்
  • ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற போது பரிதாபம்

ஜோலார்பேட்டை

வேலூர் அடுத்த செதுவாலை புதுமனை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாண்டிலியன் (வயது 37). இவர் மனைவி, மகன் ஹரிஹரன் ( 7) மற்றும் உறவினர்களுடன் வேலூரில் இருந்து நேற்று காலை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். ஆட்டோவை சாண்டிலியன் ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில் பொன்னேரி அடுத்த மண்டலவாடி கூட்டு ரோடு அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் இருந்து திடீரென ஹரிஹரன் தவறி கீழே விழுந்தார்.

இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறுவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுவனின் தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News