உள்ளூர் செய்திகள்

ரெயிலில் வெளி மாநிலத்திற்கு கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-12-19 15:19 IST   |   Update On 2022-12-19 15:19:00 IST
  • ½ டன் சிக்கியது
  • குன்னத்தூர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில பெங்களூர் வரை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் மறைத்து வைத்து இருந்த சிறு சிறு மூட்டைகளில் சுமார் ½ டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வருவாய் துறையினர் திருப்பத்தூர் அருகே குன்னத்தூர் பகுதியில் உள்ள நுகர்வோர் பொருட்கள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News