உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கடனை திருப்பிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2023-04-06 12:07 IST   |   Update On 2023-04-06 12:07:00 IST
அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தேனி:

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த உதயமூர்த்தி மனைவி லதா (வயது 47). இவர் தனது மகன் பிரசாத் (29)தின் தேவைக்காக கடன் கொடுத்துள்ளார்.

அந்த கடனை திருப்பிக் கேட்ட போது ஆட்டோ ஓட்டி கழித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் லதா அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பிரசாத் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News