ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மண்டை உடைப்பு
- 5 பேர் கைது
- சாமி தீபாராதனை காட்டுவதில் தகராறு
செய்யாறு:
செய்யாறு அடுத்த பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பத்மநாபன் (வயது 60). அதே பகுதியில் பச்சையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருவிழா நடப்பதால் சாமி வீதி உலா வருகிறது. இந்த நிலையில் பத்மநாபன் சாமி வீதி உலா வரும்போது வீடு வீடாக தீபாராதனை காட்டலாம் என கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் பத்மநாபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமா ரியாக தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தடுக்க வந்த பத்மநாபன் மகன் ஜெயபிர காஷையும் தாக்கினார்.
மேலும் கணேசனின் ஆதர வாளர்கள் விஜய், கருணாக ரன், ஆறுமுகம், ரமேஷ்,
ஏகாம்பரம், பசுபதி, அருள் ஆகிய 7 பேரும் தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
படு காயமடைந்த தந்தை, மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதேபோல் பத்ம நாபன் ஆதரவாளர்களான ஜெயபிரகாஷ், ஜெயசிம்மன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய 5 பேரும் கணேஷ் மற்றும் அவரது உறவினர் விஜயை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து பத்மநா பன் தரப்பில் அவரது மகன் ஜெயபிரகாஷூம், கணேசன் தரப்பில் அவ ரது சகோதரர் ஆறுமுகமும் செய்யாறு போலீசில் தனிதனியாக புகார் செய்தனர்.
புகாரின்பேரில் கணேச னின் உறவினர்களான கருணாகரன், ஆறுமுகம், ரமேஷ், ஏகாம்பரம், பசு பதி ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீஸ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.