உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
- பேரூராட்சி மன்ற தலைவரை கண்டித்து நடந்தது
- பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ள நிலையில் 8 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இடையே பணியின் காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும் மேலும் தூய்மை பணியாளர்களை தரகுறைவாக நடத்து வதாகவும் கூறி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.