உள்ளூர் செய்திகள்

போதை பொருள் குறித்து மாணவர்கள் ஊர்வலம்

Published On 2023-06-27 14:06 IST   |   Update On 2023-06-27 14:06:00 IST
  • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
  • மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்

செய்யாறு:

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் அசோக், முதுகலை ஆசிரியர் குமரவேல், உடற்கல்வி இயக்குனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக டி எஸ் பி வெங்கடேசன் கலந்துகொண்டு , போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறினார். தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான சாலையான காந்தி சாலை, ஆற்காடு சாலையில் உழவர் சந்தை வரை சென்றது. ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சரவணன், டி.ரகுராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News