உள்ளூர் செய்திகள்

மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர் கைது

Published On 2023-06-27 14:12 IST   |   Update On 2023-06-27 14:13:00 IST
  • போக்சோவில் நடவடிக்கை
  • போக்சோவில் நடவடிக்கை

திருவண்ணாமலை:

கடலாடி அடுத்த மசார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவியை அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் மாணவி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதன் பேரில் போளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவியை ஈவ் டீசிங் செய்த மாணவனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags:    

Similar News