உள்ளூர் செய்திகள்

அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் திட்டம்

Published On 2023-06-01 09:23 GMT   |   Update On 2023-06-01 09:23 GMT
  • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
  • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

செங்கம்:

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தை பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர்.

சி.என்.அண்ணாதுரை, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மு.பெ.கிரி (செங்கம்), வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபார திமனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு, புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷ்னாபீ, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News