உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மீது பஸ் மோதி டிரைவர் பலி

Published On 2023-06-25 08:30 GMT   |   Update On 2023-06-25 08:30 GMT
  • விவசாய பணிக்காக சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). டிராக்டர் டிரைவர். இவர் இன்று அதிகாலை விவசாய பணிக்காக தனது டிராக்டரை ஓட்டிக்கொண்டு கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணாநகர் கூட்டு சாலை அருகே வந்தபோது முன்னால் வேலாயுதம் ஓட்டிச் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் வேலாயுதம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். டிராக்டர் 2 துண்டுகளானது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலாயுதம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News