உள்ளூர் செய்திகள்

அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 2 பேர் கைது

Published On 2023-07-14 14:39 IST   |   Update On 2023-07-14 14:39:00 IST
  • போஸ்டர் ஒட்டுவேன் என மிரட்டல்
  • ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் பேரூ ராட்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அலு வலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகங்களில் உள்ள சுவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட் டிருந்தது.

இந்த சுவரொட்டிகளை அதிகாரிகள் முன்னிலையில் அலுவலக ஊழியர்கள் கிழித்து அகற்றினர்.

இதையறிந்த பெரணமல்லூர் அதிமுக நகர துணைச்செயலாளர் .கே.எஸ்.அறிவழகன், அவரது நண்பரும் ஒப்பந்ததாரருமான முருகன் ஆகிய இருவரும், கடந்த 7-ந் தேதி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தரா ஜனை செல்போனில் தொடர்பு கொண்டு, 'அதிமுக சுவரொட்டியை ஏன் அகற்றினீர்கள்? என கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், 'அதே இடத்தில் மீண்டும் போஸ்டர் ஒட்டுவேன், மீறி கிழித்தால் கையை வெட்டு வேன்' என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல், சுவ ரொட்டி அகற்றியது தொடர்பாக பிடிஓ வெங்கடேனுக்கும், இவர் கள் இருவரும் போனி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜன், பிடிஓ வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியே பெரணமல்லூர் போலீ சில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அதிமுக நகர துணைச்செயலாளர் அறிவழகன் உட்பட 2 பேரையும் தேடிவந் தனர்.

மேலும், செய்யாறு டிஎஸ்பி வி.வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதை யடுத்து, தலைமறைவாக இருந்த அறிவழகன், முரு கன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News