உள்ளூர் செய்திகள்

மின் கம்பத்தில் வேன் மோதி விபத்து

Published On 2023-08-24 09:07 GMT   |   Update On 2023-08-24 09:07 GMT
  • போலீசார் விசாரணை
  • மின்ஒயர்களும் அறுந்து சேதமானது

வந்தவாசி:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வெங் கடேசன் (வயது 30), வேன் டிரைவர்.

இவர் நேற்று அதி காலை வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனத்திலிருந்து காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில், இளங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது சாலையோரம் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் டிரெயிலர் மீது வேன் மோதியது.

அதன்பிறகும் நிற்காத வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமாகி கம்பிகளும் அறுந்து விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் வெங்கடேசன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மின்கம்பம் சேதமடைந்து மின்ஒயர்களும் அறுந்ததால் இது குறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News