உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி பலி

Published On 2023-09-18 08:21 GMT   |   Update On 2023-09-18 08:21 GMT
  • ஹீட்டரை ஆன் செய்த போது விபரீதம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

போளூர்:

போளூர் அடுத்த பொன்நகரை சேர்ந்தவர் சுதாகர் (25). விவசாயி. மனைவி வினோதினி (வயது 23).

மகன் மிதுன் (3). வினோதினி நர்சிங் முடித்துவிட்டு போளூர் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்து வந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக வினோதினி ஹீட்டர் சுச்சை ஆன் செய்தார். அப்போது அதிலிருந்த மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி எரியப்பட்டு மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

வெகு நேரம் ஆகியும் வினோதினி வராததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோதினி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோதினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News